இலங்கை செய்தி

116 மாகாண சபை உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க 116 மாகாண சபை உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 116 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தம்மை அர்ப்பணிப்பதாக 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (30) உறுதிப்படுத்தியிருந்தனர்.

கடுமையான அராஜகம், வரிசை யுகத்தை ஏற்படுத்தாத சமூக, அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய வலுவான நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியால் மாத்திரமே இந்த முடிவை எடுத்ததாக எம்.பி.க்கள் தெரிவித்திருந்தனர்.

அமைச்சர்களான அலி சப்ரி, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, அனுர பிரியதர்ஷன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, டி.பி ஹேரத், மஹிந்தானந்த அளுத்கமகே, பிரேமநாத் சி. தொலவத்த, ஜானக வக்கம்புர, ஜோன் செனவிரத்ன, டக்ளஸ் தேவானந்தா, மதுர விதானகே, ராஜிகா விக்கிரமசிங்க உள்ளிட்டோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

 

 

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!