உலகம் செய்தி

சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் மாயமாகியுள்ளனர்

சீனாவில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் குவாங்டாங் பகுதியில் 11 பேர் காணாமல் போயுள்ளனர்.

எனினும், வெள்ளம் காரணமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அப்பகுதியில் 60,000க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பெருமளவிலான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல நிவாரணக் குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, வெள்ளத்தில் சிக்கிய மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

தற்போது நிலவும் மழையுடனான வானிலை இனிவரும் நாட்களில் தொடரும் என சீன வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!