இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரித்தானியாவில் வேலையை இழக்கப்போகும் 10,000 அரச ஊழியர்கள்!

பிரித்தானியாவில் 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரெக்சிட் மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவுகளை சரிசெய்ய அமைச்சர்கள் 5% சேமிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவில் சேவை மிகவும் பெரியதாகவும், கட்டுப்பாடற்றதாகவும் மாறியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன்படி வைட்ஹாலில் தற்போது 513,000 முழுநேர அரசு ஊழியர்கள் உள்ளனர், இது 2016 இல் 380,000 ஆக இருந்த குறைந்த அளவிலிருந்து 133,000 அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை குறைத்துக்கொள்ள அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்