ஐரோப்பா செய்தி

வெளிநாடுகளில் 66 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களை சேமித்துவைத்துள்ள ரஷ்யா!

க்ரைன் – ரஷ்யா போரை தொடர்ந்து மேற்கத்தேய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டர் தயாரிக்கும் தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ரஷ்யாவின் ஸ்திரத்தன்மையின் அடிப்படை அஸ்திவாரங்கள் எவரும் நினைத்ததை விட வலிமையாக இருப்பதாக குறிப்பிட்டார்.

எங்களுடைய எதிரிநாடுகள் நாம் இரண்டு, மூன்று வாரங்களில் சரிந்துவிடுவோம் என எண்ணினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொருளாதார தடைகள் இருந்தபோதும் கடந்த ஆண்டில் ரஷ்யா வெளிநாடுகளில் 66 பில்லியன் பவுண்டுகள் சொத்துக்களை சேமித்து வைத்துள்ளதாக புளூம்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடல்சார் செல்வம் ரொக்கம், ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு இடையே பரவுகிறது, ரஷ்யா அதன் ஏற்றுமதி மூலம் ஈட்டிய லாபத்தில் மூன்றில் ஒரு பங்கைக் குறிக்கிறது.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!