செய்தி தமிழ்நாடு

மது குடிப்பவர்களால் நாங்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம்

மதுஅருந்திவிட்டு பலரும் பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர் இல்லங்களுக்கு முன்பே மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றது.

சில சமயங்களில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபடுவதாகவும் இதனால் பெண்கள்  வெளியில் நடமாட முடிவதில்லை எனவும்பல நேரங்களில் நாங்கள் வெளியிலேயே காவலுக்கு இருப்பது போல் இருக்கின்றோம்.

ஆட்கள் இல்லை எனில் வீட்டின் முன்பே இயற்கை உபாதைகளை கழித்து நாசம் செய்கின்றனர். இவர்களால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. நிம்மதியாக வெளியில் சென்று வர முடிவதில்லை.  இதனை.தட்டி கேட்டால் குடிபோதையில் தங்கள் இழிவாக பேசுகிறார்கள்.

குடிப்பவர்களால் தாங்கள் அருகில் உள்ள மளிகை கடைக்கு கூட சென்று வர பயமாக உள்ளது எனவும் இங்குள்ள மதுபான கடை இரவு பகல் என எல்லா நேரமும் இயங்கி வருகிறது இதனால் எந்நேரமும் இங்கு குடிப்பவர்கள் வந்து செல்கிறார்கள்

இரவு நேரங்களில் ரகளைகளில் ஈடுபடுவதால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவ்வப்போது தங்களின் சிரமங்களை சமாளித்துக் கொள்கின்றனர் எனவும்

இப்பிரச்சனைகள் குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனுவாக வழங்கி உள்ளதாகவும் இருந்தும்  எந்தவித மாற்றமும் ஏற்படாத நிலையில் முழுமையாக நாங்கள் சந்திக்கும் தினசரி பிரச்சனையை மாவட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர்  கவனத்தில் எடுத்துக் கொண்டு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!