செய்தி தமிழ்நாடு

தாம்பரம் அருகே மூவரசம்பட்டில் குளத்தில் குளித்த 5 பேர் மூழ்கினர்

தாம்பரம் அருகே மூவரசம்பட்டில் குளத்தில் குளித்த 5 பேர் மூழ்கினர். L

நான்கு பேரின் உடல்கள் மீட்பு மேல் ஒருவரை தேடும் பணி தீவிரம்

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மூவரசன் பேட்டையில் தர்மராஜ் கோவில் உள்ளது. இந்த தர்மராஜா கோவிலில் பல்லாக்கு தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்ற இளைஞர்கள் விழா முடிந்தவுடன்.

தர்மராஜா கோவில் அருகே உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். இதனை அடுத்து அப்பொழுது குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது 2 பேர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிகளுக்கு சென்று குளித்ததால் , தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இதனைப் பார்த்த அருகில் இருந்த மூவர் தண்ணீரில் மூழ்கிய, இருவரை காப்பாற்ற சென்றதாக கூறப்படுகிறது.  அப்பொழுது மேலும் ஆழமான பகுதிக்கு சென்றதால் அந்த மூன்று பேரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இது நடித்து உடனடியாக பழவந்தாங்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது காவல்துறையினர் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவம நடைபெற்ற இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை என மற்றும் காவல்துறையினர் இணைந்து உயிரிழந்த நிலையில் இளைஞர்கள் சூர்யா பாவனேஷ் ராகவன் மற்றும் லோகேஷ்வரன் ஆகிய நான்கு பேரின் உடல்களை கண்டெடுத்தனர்

மேலும் மாயமான மற்றொரு இளைஞரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

 

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!