இலங்கை செய்தி

இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படும் சட்டமூலம் 10 மடங்கு பயங்கரமானது

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலமானது, இருந்த சட்டத்தைவிட 10 மடங்கு பயங்கரமானது என தெரிவிக்கப்படுகின்றது.

சட்டத்துறை பேராசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்தார்.

“புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியாகியுள்ளது. இது பயங்கரமானது. இருந்த சட்டத்தைவிட 10 மடங்கு பயங்கரமானது.

பேரணி சென்றால் அதனை பயங்கரவாத செயல் ஆக்கலாம். நபர்கள் கைது செய்யப்படலாம். அது தொடர்பான செய்திகளை வெளியிட்டால் அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தடுப்பு உத்தரவை வழங்கலாம். அதனை சவாலுக்குட்படுத்த முடியாது.

இந்த சட்டமூலத்துக்கு எதிராக நாம் நீதிமன்றத்தை நாடுவோம். இருந்த சட்டமூலம் பயங்கரமானது என்பதால்தான் அதை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இருந்ததைவிடவும் மோசமான சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது” எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.

 

(Visited 10 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content