இலங்கையில் அனைத்து வரி செலுத்துவோருக்கும் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் அனைத்து வரி செலுத்துவோரும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை செப்டம்பர் 30ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு வருவாய் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவு தனிநபர்கள், நிறுவனங்கள், கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து வரி செலுத்துவோருக்கும் பொருந்தும் என்று உள்நாட்டு வருவாய் திணைக்களம் கூறியுள்ளது.
உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் தகவலுக்கமைய, இந்த இறுதி கொடுப்பனவுகளை 2 முறைகள் மூலம் மேற்கொள்ள முடியும்.
ஒன்லைன் வரி செலுத்தும் தளம் (OTPP) மூலம் ஒன்லைனில் பணம் செலுத்த முடியும்.
இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் பணம் செலுத்த முடியும்.
தாமதங்கள் அல்லது பணம் செலுத்தாததற்கு வட்டி மற்றும் அபராதங்கள் வசூலிக்கப்படும் என்று திணைக்களம் வலியுறுத்துகிறது.
எனவே, வரி செலுத்துவோர் கட்டணச் சீட்டுகளுக்காகக் காத்திருக்காமல் உரிய திகதிக்கு முன் பணம் செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு வருவாய் திணைக்களம் மேலும் கூறுகிறது.