இலங்கை செய்தி

இலங்கை கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

2022 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை தொடரும்.

இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

(Visited 13 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை