செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் கார் மோதி கட்டிடமே நொறுங்கிய விபத்து – அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்காவில் காரை திருடிச் சென்ற நபர்களை பொலிஸார் விரட்டிச் செல்லும்போது, இடம்பெற்ற விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையின் குறுக்கே வந்த ஒரு கார் மீது மோதி, அருகே இருந்த கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், கட்டிடம் இடிந்து விழுந்து நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கார் திருட்டு மற்றும் திருடர்களின் காரை அதிவேகமாக பொலிஸார் துரத்தும் சம்பவங்கள் அதிகம். மேலும் கார் திருடர்கள் மற்றும் கார் திருடர்களை போலீசார் விரட்டும் காட்சிகள் அவ்வப்போது போலீசாரால் வெளியிடப்படும்.

இது குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. இந்த நிலையில்,  அமெரிக்காவின் பால்டிமோர் நகரில், காரைத் திருடி சென்றவர்களை பொலிஸார் துரத்தும் போது, திருடன் பயன்படுத்திய கார் சாலையின் குறுக்கே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அடுத்த அடுத்த நொடியே விபத்துக்குள்ளான இரண்டு கார்களும், அருகில் உள்ள கட்டிடத்தின் மீது மோதியதில், கட்டிடம் சுக்கு நூறாக உடைந்து இரண்டு கார்களின் மீதும் விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

(Visited 6 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி