பிலிப்பைன்ஸின் கடற்பகுதியில் பதற்றம்!

பிலிப்பைன்ஸின் கடற்பகுதியில் சீனாவின் கப்பல்கள்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மணிலாவின் கடலோரக் காவல்படை தனது 97-மீட்டர் (318-அடி) கப்பலான பிஆர்பி தெரேசா மக்பானுவா மூலம் கடற்கரைக்கு அருகில் ஒன்பது நாள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான்கு சீனக் கடலோரக் காவல் (CCG) கப்பல்கள் படகில் 40 முறைக்கு மேல் தென்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் சீனாவால் உரிமை கோரப்படும் கப்பல் தென்பட்டதாக கூறப்படுகிறது.
சீனக் கப்பல்கள் மோதலைத் தடுப்பதில் சர்வதேச விதிகளை “பொறுப்பற்ற முறையில்” புறக்கணித்ததாக அது கூறியது.
(Visited 31 times, 1 visits today)