இலங்கை

இலங்கை: 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல குழப்பத்தின் காரணமாக இன்று (10ஆம் திகதி) முதல் அடுத்த சில நாட்களில் தீவின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 12 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் ஹங்வெல்ல பகுதியில் 141.5 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் வொகன் தோட்டத்தில் 105.5 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை, நுவரெலியா, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!