இலங்கை

மெட்டியகொட, மஹவத்த பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

மெட்டியகொட, மஹவத்த வீதி பகுதியில் இன்று (12.10) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் காயமடைந்த நிலையில், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது.

வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி ரத்கம பிரதேசத்தில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வீடொன்றில் தங்கியிருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்திருந்தது.

அதன்படி அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான இடத்தை சோதனை செய்த போது, ​​அங்கு தங்கியிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குறித்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் எல்பிட்டிய மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின்  நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!