ஐரோப்பா

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிர்ச்சி – மகளை கொன்ற தந்தை மரணம்

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் எஸன் நகரத்தில் தந்தை ஒருவர் மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த வாரம் ஜெர்மனி நாட்டில் எஸன் நகரத்தில் பாரிய அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதாவது 50 வயதுடைய ஒரு தந்தையானவர் தனது 19 வயதுடைய மகளை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

அதாவது கடன் சுமையால் அவதியுற்ற தந்தையானவர் வீட்டில் இருந்த தனது 19 வயது மகளை கொலை செய்துள்ளார்.

பின்னர் இவர் அயல் நகரமான முல்லைமில் ஓடுகின்ற ரயிலின் முன்னால் பாய்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதாவது அவருடைய 20 வயதுடைய மகள் தனது தந்தையை காணவில்லை என்ற அச்சத்தில் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!