இந்தியா

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி! போலீஸார் எடுத்த நடவடிக்கை

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி போலீஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த 3ம் திகதி முதல் வன்முறை நடந்து வருகிறது.

100க்கும் மேற்பட்டோர் பலியாகிய வன்முறைக்கு பாஜகவின் பிரித்தாளும் அரசியலே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்றும் நாளையும் ராகுல் காந்தி மணிப்பூர் செல்ல உள்ளதாக அக்கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று மணிப்பூர் சென்றார். இம்பால் விமான நிலையம் அருகே சோதனைச் சாவடியில் ராகுல் காந்தியின் வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content