இலங்கை

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு!

சிறுவர் துஷ்பிரயோக சம்பங்களை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி ரணியில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

16 வயது சிறுமியின் மரணம் மற்றும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட அண்மைய துஷ்பிரயோக சம்பவங்களை அடுத்து, ஜனாதிபதி மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், நாட்டின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தனியான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சட்ட அமைப்பை தயாரிக்கும் போது கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும், துஷ்பிரயோகங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, உரிய சட்டங்கள் உருவாக்கப்பட்டவுடன் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி  அலுவலகம் தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்