இலங்கை

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் நாடாளுமன்ற ஊழியர்கள்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை  சமர்பிக்கும் காலத்தில் நாடாளுமன்ற ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிர்வாகத்தை மறுசீரமைப்பது தொடர்பான குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

மறுசீரமைப்பு குறித்த குழு அறிக்கை ஏற்கனவே நாடாளுமன்றத் துறைத் தலைவர்களுக்கு மேலும் கவனிப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கைக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றத்தில் 09 துறைகள் உள்ளன, அவற்றில் சுமார் 850 ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!