Site icon Tamil News

ஒலிம்பிக் சாம்பியனான டோரி போவி சடலமாக மீட்பு

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஓட்டப்பந்தய வீரரும், நீளம் தாண்டுதல் வீரருமான டோரி போவி புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

டோரி போவியின் பிரதிநிதி கிம்பிள் ஹாலண்ட் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

புளோரிடாவின் ஆர்லாண்டோவில் உள்ள அவரது வீட்டில் டோரே எப்படி இறந்து கிடந்தார் என்பதை உள்ளூர் ஷெரிப் துறை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளது.

சில நாட்களாக போவியை காணவில்லை எனவும் குரல் கேட்கவில்லை எனவும் அயலவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடிய வேளையில் வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, ஆனால் இதுவரை மரணத்திற்கான காரணம் குறித்து புலனாய்வுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தடகளத் துறையில் அற்புதமான தடகள வீராங்கனையாக அறியப்பட்ட இவர் இறக்கும் போது வயது 32 ஆகும்.

டோரி போவி 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவுக்காக மூன்று பதக்கங்களை வென்ற ஒரு தடகள வீரர் ஆவார்.

4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

2017 லண்டனில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 100மீ மற்றும் 4×100மீ ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். இறுதிப் போட்டியில் ஐவரி கோஸ்ட்டின் மேரி ஜோசியை தோற்கடித்து 100 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றார்.

மிசிசிப்பியின் சாண்டில்லில் பிறந்த போவி, சிறுவயதில் திறமையான கூடைப்பந்து வீரராக இருந்தார்.

போவியுடன் அவரது கடைசி அதிகாரப்பூர்வ போட்டி ஜூன் 2022 இல் நடைபெற்றது. அவர் கடைசியாக 2019 தோஹாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் உலக அரங்கில் தோன்றினார்.

Exit mobile version