அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸ்,பிள்ளையானுக்காக நாமல் களத்தில்!

“புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார்.

“புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக ஜனநாயக வழியில் அரசியலுக்கு வந்தவர்தான் டக்ளஸ் தேவானந்தா.

மக்கள் வாக்கு மூலம் நாடாளுமன்றம் வந்து, வடக்கு மக்களுக்கு அவர் சேவையாற்றியுள்ளார். எனினும், புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்துவதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே பிள்ளையானும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஜனநாயக வழியில் அரசியலுக்கு வந்தவர்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட துப்பாக்கி தொடர்பிலேயே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வளவு நாள் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசியல் நிகழ்ச்சி நிரலே அமுலாகின்றது.”எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!