ஐரோப்பா செய்தி

லண்டனில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

லண்டனில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆபரேஷன் பேஸ்லைஃப் (Operation Baselife) திட்டத்தின் ஒரு பகுதியாக தலைநகரில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

லெய்செஸ்டர் சதுக்கத்தை  (Leicester Square) சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களிடம் இருந்து தொலைபேசிகள் திருடப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து காவல்துறையினர் சமானியர்கள் போல் ரோந்து சென்றுள்ளனர்.

இதன்போது குற்றவாளிகள் மடக்கி பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!