ஐரோப்பா

பிரான்சில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை : புதிய திட்டங்கள் அறிவிப்பு!

குறைந்த ஊதியம், அதிக கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நியாயமற்ற போட்டி ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் பல நாட்களாக போராட்டம் நீட்டித்து வருகின்ற நிலையில், விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய நடவடிக்கைகளை பிரான்சின் பிரதம மந்திரி இன்று (01.02) அறிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான விவசாயிகளுடன் கனரக டிராக்டர்களை ஓட்டிக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலைகளை மறித்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கேப்ரியல் அட்டல்,  ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உயரும் விலைகள் மற்றும் அதிகாரத்துவத்தில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும்  என்று  தெரிவித்துள்ளார்.

பாரிஸைச் சுற்றியுள்ள எட்டு நெடுஞ்சாலைகளில் ஏராளமான போலீஸ் பிரசன்னத்திற்கு மத்தியில் போக்குவரத்து தடைகள் இருந்தன என்று கூறிய அவர், “ஒரு தீர்வு இல்லாமல்” புதிய பூச்சிக்கொல்லி தடை எதுவும் இருக்காது என்றும் உறுதியளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் வேறு இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட எந்த பூச்சிக்கொல்லிகளும் பிரான்சில் தடை செய்யப்படாது என்றும் வலியுறுத்தினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!