இலங்கை

இலங்கையர்களை வீதிக்கு அழைத்துள்ள எம்.ஏ.சுமந்திரன் MP..

இலங்கை அரசின் தவறான பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மக்கள் அங்கிருந்து பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்து மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்

இது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். “தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளை மீறியும் மக்கள் ஒன்று திரளத் தயாராக இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்கள் மூலம் தனிநபர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துவது மிகவும் அவசியமானது.

இந்த அரசாங்கம் மக்களை மண்டியிட வைத்துள்ளதால், மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.

தற்போதைய விவகாரங்கள் நம்மை மேலும் நிர்பந்திக்கக்கூடும். அதனால் சட்டத்தை மீறியதாக இருந்தாலும், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தங்கள் குறைகளை கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்