கலீதா ஜியாவின் இறுதிச்சடங்கு இன்று: டாக்கா பறந்தார் விஜித ஹேரத்!
பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் Khaleda Zia இறுதிச்சடங்கு இன்று (31) நடைபெறுகின்றது.
தெற்காசிய நாடுகளில் இருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்று, அஞ்சலி செலுத்தவுள்ளனர். இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath பங்கேற்கின்றார்.
இதற்காக இன்று காலை அவர் பங்களாதேஸ் தலைநகர் டாக்கா நோக்கி பயணமானார்.
பங்களாதேஸின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தனது 80 ஆவது வயதில் நேற்று காலமானார். ஆவரின் மறைவையொட்டி பங்களாதேஸின் மூன்று நாட்கள் துக்கம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பங்களாதேஸின் ஜல்பைகுரியில் கடந்த 1945-ம் ஆண்டில் கலீதா பிறந்தார்.
1960-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜியாவூர் ரஹ்மானை, கலிதா திருமணம் செய்தார்.
1975 -ம் ஆண்டில் மூத்த ராணுவ தளபதி ஜியாவூர் ரஹ்மான் ஆட்சியைக் கைப்பற்றி ஜனாதிபதியாக பதவியேற்றார்.
கடந்த 1978-ம் ஆண்டில் அவர் பங்களாதேஸ் தேசிய கட்சியை தொடங்கினார்.
1981-ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். இதன்பிறகு அவரது மனைவி கலீதா ஜியா கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.
1991-ல் நடைபெற்ற தேர்தலில் பிஎன்பி அமோக வெற்றி பெற்று கலீதா ஜியா பங்களாதேசின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார்.





