மத்திய கிழக்கு

கத்தார் தலைநகரில் மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

காஸாவில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய ஹமாஸ் இயக்கத் தலைவர்களைக் குறிவைத்து கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) தாக்குதல் நடத்தியது.

மத்திய கிழக்கு முழுவதும் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வரும் இஸ்ரேல், ஹமாஸ் அரசியல் தளம் அமைந்துள்ள கத்தாரையும் தனது இலக்காகக் கொண்டுள்ளது.

கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்கள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார். ஹமாஸ் தரப்பை மேற்கோள்காட்டிய கத்தாரின் அல் ஜசிரா தொலைக்காட்சி, இந்தத் தாக்குதல் ஹமாசின் காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தியோர்மீது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தது.

தோஹாவில் செவ்வாய்க்கிழமை பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் சாட்சிகள் தெரிவித்தனர். நகரின் லெக்டிஃபியா பெட்ரோல் நிலையத்திலிருந்து கரும்புகை கிளம்பியதாக அவர்கள் கூறினர். பெட்ரோல் நிலையத்திற்குப் பக்கத்தில் அமைந்துள்ள சிறிய குடியிருப்பு வளாகம், காஸா போர் தொடக்கத்திலிருந்து கத்தாரின் எமிரி காவலர்களால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரியை மேற்கோள்காட்டிய இஸ்ரேலிய ஊடகங்கள், இந்தத் தாக்குதல் ஹமாசின் நாடுகடத்தப்பட்ட காஸா தலைவரும் மூத்த பேச்சுவார்த்தையாளருமான கலீல் அல் ஹய்யா உள்ளிட்ட உயர்மட்ட ஹமாஸ் தலைவர்களை இலக்காகக் கொண்டது என்று தெரிவித்தன.

ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமரசம் செய்துவரும் கத்தார், ஹமாஸ் அதிகாரிகள்மீது நடத்தப்பட்ட “’கோழைத்தனமான’ இஸ்ரேலிய தாக்குதலைக் கண்டித்ததுடன், இது அனைத்துலகச் சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்றும் குறிப்பிட்டது.

(Visited 4 times, 4 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.