இலங்கை

ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்கிழமை (18.07) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்யன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

அந்த கலந்துரையாடலின் போது ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு இறுதி தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்படி  எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி வழங்கும் தீர்வுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக சாணக்யன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வார இறுதியில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும்  அதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எழுத்துமூல கோரிக்கையையும் விடுத்திருந்தனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!