இலங்கையில் ஊரடங்கு சட்டம் நீட்டிப்பு
இன்று காலை 6.00 மணி வரை அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று நீடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நண்பகல் 12 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக
நாடு முழுவதும் அமுலுக்கு வரும் வகையில் நேற்று இரவு 10.00 மணி முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்திய ஊரடங்கு சட்டம் இன்று காலை 06.00 மணிக்கு தளர்த்தப்படவிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)





