ஐரோப்பா

பிரெஞ்சி விமான நிலையத்தில் கூட்டுப்பிராத்தனை செய்தவர்களால் ஏற்பட்ட சர்ச்சை!

பிரெஞ்சு விமான நிலையத்தில் இஸ்லாமிய பயணிகள் சிலர் கூட்டுப் பிராத்தனையில் ஈடுபட்டுள்ள படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், மற்றும் விமான நிலைய ஆபரேட்டர் இந்த சம்பவத்தை வருந்தத்தக்கது என்று விவரித்தார்.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட படங்கள், பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் புறப்பாடு மண்டபத்தில் பல டஜன் கணக்கான  பயணிகள் ஜோர்டானுக்கு செல்லும் விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் பிராத்தனையில் ஈடுபடுவதை காட்டுகிறது.

ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போருக்கு மத்தியில் பிரான்சில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த படங்கள் வந்துள்ளன.

பிரான்சின் போக்குவரத்து மந்திரி கிளெமென்ட் பியூன் விமான நிலைய அதிகாரிகள் விதிகளை அமல்படுத்துவதில் முழு உறுதியுடன் இருப்பதாக X இல் பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸின் மிகப்பெரிய விமான நிலையத்தின் 2B முனையத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது, இதில் சுமார் 30 பயணிகள் பங்கேற்றனர்.

அனைத்து மதத்தினரும் தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்வதற்காக விமான நிலையத்தில் சிறப்பு மூடிய பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, ஆனால் பிரான்ஸ் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது கட்டிடங்கள் போன்ற பொது இடங்களில் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்