இலங்கை

சிறப்பு அதிரடிப்படையினருக்காக (STF) புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு அதிரடிப்படைக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

சிறப்பு அதிரடிப்படை முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில்  76 பிரதான முகாம்கள், 23 துணை முகாம்கள் மற்றும் 14 சிறப்பு பிரிவுகளை இயக்குகிறது.

இந்நிலையில் அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 314 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள்ள 90  சதவீதமானவை  10 ஆண்டுகளுக்கும் மேலானவை என்றும் அவற்றில் சிலவற்றில் தொழில்நுட்ப குறைப்பாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமை சிறப்பு அதிரடிப்படையின் கடமைகளை முன்னெடுக்க பாரிய தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களை அடக்குதல் போன்ற அதன் கடமைகளை திறம்படவும் நிறைவேற்றுவதற்கு மேற்படி வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 5 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!