AsiaCup M06 – இந்திய அணிக்கு 128 ஓட்ட வெற்றியிலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான் அணி

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
தொடரின் 6வது நாளான இன்று துபாயில் நடந்து வரும் 6வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடாமல் இந்தியாவின் பந்து வீச்சில் திணறி குறைந்த ஓட்டங்களுக்கு பல விக்கெட்களை பறி கொடுத்தது.
இதில் முகமது ஹாரிஸ் 3 ரன், பக்கார் ஜமான் 17 ரன், சல்மான் ஆகா 3 ரன், ஹசன் நவாஸ் 5 ரன் எடுத்து அவுட் ஆகினர். சைம் அயூப், முகமது நவாஸ் இருவரும் ரன் எடுக்காமல் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.