சிங்கப்பூரில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

சிங்கப்பூரில் கணவன் மனைவிக்கு இடையிலான அதிகம் ஆபத்தில்லாத துன்புறுத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப வன்முறை பற்றிய அறிக்கை கணவன்-மனைவி வன்முறை, முதியோருக்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் எதிரான வன்முறை ஆகியவற்றையும் எடுத்துச் சொல்கிறது.
கடந்த ஆண்டு அத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 2,008ஆக பதிவாகியுள்ளது.
முதியோருக்கு எதிராகச் சுடுசொற்களால் துன்புறுத்தும் அதுபோன்ற வன்முறையும் அதிகரித்துள்ளது.
குடும்ப வன்முறையைச் சமாளிக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
2020இல் பணிக்குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 24 மணி நேரமும் செயல்படும் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டது.
(Visited 77 times, 1 visits today)