வட அமெரிக்கா

அமெரிக்காவில் தண்ணீரை குடித்ததால் உயிரிழந்த பெண்

அமெரிக்காவில் அதிக தண்ணீரை குடித்த ஒரு பெண் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

வெயிலின் தாக்கம் தாங்காமல் அந்த பெண் அதிகளவில் நீர் பருகியுள்ளார்.

அமெரிக்க நாட்டின் இந்தியானா மாகாணத்தில் ஆஷ்லே சம்மர் எனும் ஒரு 35 வயது இளம்பெண் கடந்த ஜூலை மாதத்தில் தன் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் இந்தியானா மாகாணத்தின் லேக் ப்ரீமேன் எனும் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கே வெயிலின் தாக்கம் தாங்காமல் அவர் அதிகளவு தண்ணீரை குடித்துள்ளார்.

அதாவது, 20 நிமிடங்களுக்குள் 1.5 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். இதனால் தலை சுற்றி அவர் மயங்கி விழுந்த நிலையில் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஹைப்போநெட்ரேமியா (hyponatremia) எனும் சோடியம் குறைபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.

அவருக்கு உடனே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் கூட எந்த பலனும் இல்லாமல் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!