இலங்கை

உணவு டெலிவரி பையை சோதனையிட்ட அதிரடிப்படையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

உணவு டெலிவரி என கூறி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுக்திய சோதனை நடவடிக்கையின் கீழ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, அதன் அதிகாரிகள் குழுவொன்று நேற்று பிற்பகல் எடேரமுல்ல பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் இருந்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது 332 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 50 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 9X9 மில்லி மீற்றர் ரக 97 தோட்டாக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் டுபாயில் தங்கியிருந்து இந்த நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகளை மேற்கொள்ளும் களுதுர தினேஷ் ஷாமந்த டி சில்வா என்ற”பபி” என்பவருடன் தொடர்பு வைத்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!