இலங்கை

இலங்கையில் கடலுக்குச் சென்ற ஜப்பானியர் உட்பட நால்வர் மாயம்!

மாரவில, சீ கட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன படகின் உரிமையாளரான மாரவில – வடக்கு மூடுகடுவ பகுதியைச் சேர்ந்த ஸ்ரீயானி ஜீவனி பெர்னாண்டோ இன்று (19.11) அதிகாலை 03.30 மணியளவில் மாரவில பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05 பேர் மீன்பிடிப்பதற்காக சிறிய டிங்கி படகில் கடலுக்குச்  சென்றுள்ளனர்.

மீன்பிடிக்கும்போது மழை பெய்ததால் படகு கடலில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது படகில் பயணித்த ஒருவர் கரையில் இருந்த மீனவர் ஒருவருக்கு தொலைப்பேசி மூலம் குறித்த தகவலை அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,  படகு கவிழ்ந்ததாக கூறப்படும் பகுதிக்கு சென்ற மற்றொரு குழுவினர் படகு ஓட்டி வந்தவரை  மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

படகில் இருந்த ஏனைய நான்கு பேரும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்