அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சி கவிழுமா? பிரதி அமைச்சர் பதிலடி!

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமே இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் பாதுகாப்பார்கள் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் திட்டவட்டமாக அறிவித்தார்.

அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டதாகவும், விரைவில் கவிழும் எனவும் எதிரணிகள் கருத்து வெளியிட்டுவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவரும்போது, இரு மாதங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என சஜித் பிரேமதாச கூறினார். அதன் பின்னர் ஆறு மாதங்களில் ஆட்சி கவிழும் எனக் குறிப்பிட்டார்.

ஆனால் ஒருவருடம் கடந்துவிட்டது. எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் அடுத்த இரண்டு பூரணை தினங்களுக்குள் ஆட்கி கவிழுமாம்.

இது மக்களின் அரசாங்கம், மக்களால் அரசாங்கம் பாதுகாக்கப்படும். எதிரணிகள் கூறுவதுபோல இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. மக்கள் அரசாங்கத்துடன் உள்ளனர். எனவே, எமக்கு எவ்வித அச்சமும் இல்லை.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!