டொனால்ட் டிரம்பிடம் கோரிக்கை விடுத்த பிரேசில் ஜனாதிபதி லுலா

பிரேசில் இறக்குமதிகள் மீது அமெரிக்க அரசாங்கம் விதித்த 40 சதவீத வரியை நீக்குமாறு பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொலைபேசி மூலம் பேசிய இருநாட்டு தலைவர்களும், நேரடி தொடர்பைப் பேணுவதற்காக அவர்களது தனிப்பட்ட தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
மேலும் பெலெமில் நடைபெறவிருக்கும் காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டிரம்பிற்கு ஜனாதிபதி லுலா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் “நாங்கள் பல விஷயங்களைப் பற்றி விவாதித்தோம், அதில் பெரும்பாலும் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் ஜூலை மாதம் பிரேசிலிய தயாரிப்புகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட 10 சதவீத வரிக்கு மேல் 40 சதவீத வரியை விதித்தது.