இந்தியா

கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கிய இருவர் உயிரிழப்பு – முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவு!

கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கிய இருவர் உயிரிழந்துள்ளதாக தமிழ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு உடனே செல்லும்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு  உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று (27.09) கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.

கரூரில் விஜயை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இதில் பலர் மூச்சு திணறலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ் வண்டிகள் பலரை சுமந்து கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மயக்கமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையொன்றும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரச்சார நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே