வடகொரியா மேலும் பல இராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பவுள்ளது

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை வலுப்படுத்த வடகொரியா மேலும் ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் அனுப்ப தயாராகி வருகிறது,என்று தென் கொரியா அறிவித்துள்ளது.
தென் கொரிய இராணுவம் திங்களன்று வட கொரியா தற்கொலை ட்ரோன்களை அனுப்ப விரும்புகிறது என்பதற்கான அறிகுறிகளை காட்டுவதாக அறிவித்துள்ளது.
வாஷிங்டன் மதிப்பீட்டின்படி, சுமார் 12,000 வட கொரிய வீரர்கள் ஏற்கனவே ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் மற்றும் சில நாட்களுக்கு முன்பு அவர்களில் 1,100 பேர் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், திங்கட்கிழமை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இறந்தவர்களின் எண்ணிக்கையை சற்று உயர்ந்தி கூறினார்.
3,000 க்கும் மேற்பட்ட வட கொரிய வீரர்கள் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அவர் கூறுகிறார்.
(Visited 12 times, 1 visits today)