இலங்கை

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து ஓய்வூதியம் எதுவும் கிடைக்கவில்லை : காணியை விற்றே வாழ்கிறேன் – சந்திரிகா!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் போது தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனவும், தற்போது காணியை  விற்று வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம் ஊழல் மோசடி தொடர்பில் முன்னாள் ஆட்சியாளர்களின் விசாரணைகளை நடத்தி வருகிறது. இதற்காக ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்கு புலனாய்வு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விசாரணையில் கலந்துகொண்டப்பின் கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  அரசாங்கத்திடம் இருந்து தாம் எதையும் பெறப்போவதில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ஒன்பது வருடங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் யாரிடமிருந்தும் சாப்பிடவில்லை. எங்களிடம் இருப்பதை மட்டுமே மற்றவர்களுக்குக் கொடுத்தோம். நான் ஜனாதிபதியாக இருந்து வீட்டிற்குச் சென்றபோது, ​​​​என் வங்கிக் கணக்கு உண்மையில் ஓவர் டிராஃப்ட் ஆனது. பின்னர், நான் நிலத்தை விற்று வாழ்கிறேன்.

எனக்கு அரசாங்கத்திலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்தபோது  ஒன்பது வருடங்களாக  எனக்கு ஓய்வூதியம் கூட வழங்கப்படவில்லை, என்னிடம் 4 வாகனங்கள் உள்ளன, 4 கார்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 3 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content