ஐரோப்பா

ஈரான் – இஸ்ரேல் மோதல் : களமிறக்கப்பட்டுள்ள பிரித்தானிய போர் விமானங்கள்!

ஈரானில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து தாக்கும் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பிரித்தானிய போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய அரச இராணுவத்திற்கு சொந்தமான ஜெட் விமானங்கள் இவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

குறித்த வான்வெளியில் பாதுகாப்புக்காக ஜெட் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரச இராணுவம் அறிவித்துள்ளது.

ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேலை தொடர்ந்து பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

நேற்று (13) மற்றும் இன்று (14) காலை ஈரான் பல வான்வழி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!