ஆசியா

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் நோய்ப்பரவல்

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா சம்பவங்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அது இயல்பான ஒன்றுதான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்திருப்பதைச் சுகாதார அமைச்சின் அண்மைய வாராந்திரக் கணக்கு காட்டியது.

கடந்த மாதத் தொடக்கத்திலிருந்தே எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மூன்றாவது வாரத்தில் சுமார் 14,000ஆக இருந்த எண்ணிக்கை மார்ச் கடைசி வாரத்தில் 28,000ஐத் தாண்டி இரண்டு மடங்கானது.

மருந்தகங்களும் அதிகமான நோயாளிகளைச் சந்திக்கின்றன. வெளியில் செல்வது அதிகரிப்பதால் எண்ணிக்கை கூடுவது இயல்புதான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நிலைமையைச் சமாளிக்க மருந்தகங்கள் கொரோனா  நோயாளிகளுக்குச் சிகிச்சை தரும் வகையில் கூடுதல் மருந்துகளை வாங்கி வைக்கின்றன.

எண்ணிக்கை இரட்டிப்பானாலும் பெரும்பகுதி மிதமான அறிகுறிகளே தென்படுவதாகவும் தொடர்ந்து உயர்ந்து பிறகு நிலைமை சீரடையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்