முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 82 ஆகும்.
இலங்கை நாடாளுமன்றத்தின் 17வது சபாநாயகராக இருந்த ஜோசப் மைக்கேல் பெரேரா, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பதவி மற்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.
இதேவேளை, இன்று காலை காலமான சங்கீத் நிபுன் சனத் நந்தசிறியின் இறுதிக் கிரியைகளை எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் பொரளை மயானத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.