இலங்கை

DAT கொடுப்பனவு தொடர்பில் பரிசீலிக்க விசேட குழு நியமனம்!

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் முன்மொழிவுகளை பரிசீலித்து மேலதிக பணிகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவிற்கும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று (19.02) கலந்துரையாடல் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கலந்துரையாடலில் சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது தொழில்சார் கோரிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்ததுடன், சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பிலான பிரேரணையை தயாரித்து அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இதனை ஆய்வு செய்ததன் பின்னர் அதிகபட்ச நியாயத்தை எட்டுவதற்கு சுகாதார அமைச்சு செயற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்கால பணிகளை முன்னெடுப்பதற்காக சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் தலைமையில் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க தொழிற்சங்க கூட்டணியின் பிரதிநிதிகள் முன்மொழிந்துள்ளனர்.

உடன்பாடு தெரிவித்த அமைச்சர், குழுவை அமைத்ததுடன், குழு நாளை (20.02) பிற்பகல் 3 மணிக்கு கூடி மேலதிக முடிவுகளை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!