Site icon Tamil News

இலங்கையில் ஒரு வேளை உணவை குறைத்துள்ள மக்கள்

 

இலங்கையில் தற்போது 70 சதவீதமானோர் நாளாந்தம் ஒரு வேளை உணவை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி இதனை தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் மூன்று வேளைகளில், உணவை உட்கொண்டவர்கள் தற்போது இரண்டு வேளையும், இரண்டு வேளைகள் உணவை உட்கொண்டவர்கள் ஒரு வேளை மாத்திரம் உணவை உட்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version