இந்திய விமானங்களுக்கான வான்வெளியை மூடிய பாகிஸ்தான் – 600 மில்லியன் இழப்பு!

பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமான நிறுவனங்களுக்கு மூடிய பிறகு, ஏர் இந்தியா நிறுவனம் 600 மில்லியன் டாலர்கள் வரை கூடுதல் செலவுகளைச் செலுத்தக்கூடும் என்று செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மறுவழித்தடங்களுக்கு நீண்ட நேரம் எடுக்கும் எனவும், இதனால் கூடுதல் எரிபொருள் செலவுகள் ஏற்படுவதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீண்ட விமான நேரங்கள், பயணிகளையும் பாதிக்கும் என்று விமான நிறுவனம் எச்சரித்தது.
இதன் விளைவாக, தடை நீடிக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏர் இந்தியா $591 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஏர் இந்தியா அரசாங்கத்திடம் விகிதாசார மானியங்களைக் கேட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
(Visited 26 times, 1 visits today)