இலங்கை செய்தி

கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் Crafting Ceylon வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய அருங்கலைகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட Crafting Ceylon ஏற்றுமதி சார்ந்த வடிவமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது. தொழில் அமைச்சு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவை இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. நாடளாவிய […]

இலங்கை செய்தி

சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்களை ஊக்குவிப்பது தொடர்பில் வங்கித் துறையுடன் பாராளுமன்ற விசேட குழு கலந்துரையாடல்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கு பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சிறிய, நடுத்தர மற்றும் நுண்தொழில்களை ஊக்குவிப்பது மற்றும் அவற்றில் காணப்படும் நிதிச் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பாக வங்கித்துறையுடன் கலந்துரையாடியது. இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் […]

இலங்கை செய்தி

யாழ் நெடுந்தீவில் 12 இந்திய மீனவர்கள் கைது!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இதுவரை காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுவதுடன்இ அவர்கள் அழைத்து வரப்பட்டதும் மேலதிக சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை செய்தி

எலி மொய்த்த உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்த உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை!

  • April 11, 2023
  • 0 Comments

மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை வைத்திருந்த உணவகத்திற்கு எதிராக நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து  மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணினையினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மன்னார் நகரில் பிரபல உணவு விற்பனை நிலையத்தில் சுகாதாரமற்ற  மனித பாவனைக்கு  பொருத்தமற்ற எலி  மொய்த்த  உணவுகள்  களஞ்சியப் படுத்தியும், விற்பனைக்காகவும் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த  உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வீடியோ காணொளியும் நீதிமன்றத்திடம் […]

இலங்கை செய்தி

இனப்பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐ.எம்.எஃப் விதிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்!

  • April 11, 2023
  • 0 Comments

இனப்பிரச்சினைக்கு தீர்வுக் காண வேண்டும் என்ற நிபந்தனையையும் ஐ.எம்.எஃப் விதிக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்! நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிபந்தனையை சர்வதேச நாணய நிதியம் விதிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று(22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் […]

இலங்கை செய்தி

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தல்

  • April 11, 2023
  • 0 Comments

இந்நாட்டு மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார். பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும், இல்லையேல் பாடசாலைகளை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

டி.எஸ்சின் தத்துவத்தை செயற்படுத்திய சிங்கப்பூர் அபிவிருத்தியடைந்த நாடாக மாறியது என ஜனாதிபதி தெரிவிப்பு Mar 23, 2023 07:26 am

  • April 11, 2023
  • 0 Comments

மறைந்த பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் தத்துவத்தை நாம் ஒதுக்கினாலும்  பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார். எமது  நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட போதும் கடந்த 75 வருடங்களில் சில அரசியல் இயக்கங்களின் தீர்மானங்களினால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவுகள் எண்ணிலடங்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். சுதந்திரச் சதுக்கத்தில்  நேற்று (22) நடைபெற்ற மறைந்த பிரதமர் […]

இலங்கை செய்தி

யாழ் வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

  • April 11, 2023
  • 0 Comments

யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த கரு பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் 22ம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த கரு தொடர்பில் ஊடகங்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த பெண் ஒருவர் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் அதனை போதனா வைத்தியசாலையின் பாவனையற்ற மலசலகூடத்தொகுதியில் வீசி இருக்கலாம் என நம்புகின்றோம். இந்நிலையில் மீட்கப்பட்ட கரு சட்ட […]

இலங்கை செய்தி

இலங்கையில் பால் மாவின் விலை குறைப்பு!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கையில் இறக்குமதி பால் மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பால் மா இறக்குமதியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். அதன்படி, 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை சுமார் 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், 400 கிராம் பால் மா பொதியின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த விலை குறைப்பை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமுல்ப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

இலங்கை செய்தி

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இணங்கிய 10 நிபந்தனைகள்!

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கை கடன் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிய 10 நிபந்தனைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய தினம் ஜனாதிபதி குறித்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இதன்படி குறித்த 10 நிபந்தனைகளும் பின்வருமாறு. 1. ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வழங்குதல். 2. ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். 3. அரசின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிதிப்பு. 5. 2025 […]

error: Content is protected !!