செய்தி தமிழ்நாடு

திருக்கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம்  அடுத்த வல்லிபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை காலகண்டீஸ்வரர்  திருக்கோவிலில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த சனிக்கிழமைன்று கணபதி ஹோமம்  முதல் கால யாக பூஜையுடன் துவங்கி மூன்று நாட்கள் பல்வேறு வேள்விகள் நடைபெற்று. இன்று காலை மங்கள வாத்தியம் முழங்க யாக சாலையில் இருந்த புனித நீர் உள்ள கலசத்தை  சிவாச்சாரியார்கள் கொண்டு […]

செய்தி தமிழ்நாடு

பூ பிரித்தல் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றதையோட்டி இன்று மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் பூ பிரித்தல் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மாவட்டத்திலேயே மிகப் புகழ்பெற்ற ஆலயமாகவும் தேவஸ்தான தலைமை கோவிலாகவும் திகழ்கிறது இந்த ஆலயத்தில் நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து பூ பல்லாக்குடன் பூச்செரிதல் விழா நடைபெற்றது இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பூப் பிரித்தல் […]

செய்தி தமிழ்நாடு

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு

  • April 15, 2023
  • 0 Comments

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவிடாய் என்பது பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.இந்த   மாதவிடாயினால் உலகளவில் 50சதவீத பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மாதவிடாய் காலத்தில் தொடர் வயிற்று வலி, உடல் ரீதியான பிரச்சினைகள்,எண்டோமெட்ரியோசிஸ் குறித்தும்,வரும் காலங்களில் நோய்களில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எண்டோ மார்ச் எனும் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை […]

செய்தி தமிழ்நாடு

பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியில் தலைவராக நீடிப்பாரா…

  • April 15, 2023
  • 0 Comments

சென்னை அடுத்த தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மனிதனேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது,அப்துல் சமது எம்.எல்.ஏ மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர், ஜவாஹிருல்லா பேட்டி ஒன்றிய பாஜக அரசு சமூகநீதியை குழிதோண்டி புதைக்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறது அதன் முதல் கட்டமாக முற்படுத்த வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு 10 சதவீத இட […]

செய்தி தமிழ்நாடு

படகு போட்டியின் இறுதி சுற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

  • April 15, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய கோவளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை தொடர்ந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் ஏற்பாட்டில் மாபெரும் படகு போட்டி மற்றும் 5000 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட செயலருமான தா.மோ.அன்பரசன் […]

செய்தி தமிழ்நாடு

உலக தண்ணீர் தினம்

  • April 15, 2023
  • 0 Comments

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு IWWA எனும் இந்திய நீர் பணி சங்கம் கோவை கிளை,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,கௌவை மாநகராட்சி, கோவை பாரதியார் பல்கலைகழகம், ஆகியோர் இணைந்து தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.உலகில் காண விரும்பும் மாற்றமாக இருங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகர காவல் ஆணகயர் பாலகிருஷ்ணன்,இந்திய நீர் பணிகள் சங்கத்தின் தேசிய துணை தலைவரும்,கோவை […]

செய்தி தமிழ்நாடு

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் சாலை மறியல்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை மாவட்டம் சூலூர்  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மழைநீர் தேங்கியதால் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள வீதிகள் சேரும் சகதியுமாக மாறியது. வீடுகளில் மழைநீர் தேங்கியதால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் 50க்கும் மேற்பட்டோர் சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்ப பகுதி மக்கள் கூறுகையில், சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படாததால், மழைக்காலங்களில் […]

செய்தி தமிழ்நாடு

மூன்று நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவி

  • April 15, 2023
  • 0 Comments

சிவகங்கை அரண்மனை வாசல் முன்புள்ள சண்முகராஜா கலையரங்கில் நகர் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி மற்றும் மாவட்ட செயலாளரும் கூட்டுறவு துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இத அதிமுகவில் நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் சின்னம்மா என காலை பிடித்துக்கொண்டு பதவி ஏற்றவர் பின்னர் அவர்களை […]

செய்தி தமிழ்நாடு

மின் கம்பியில் உரசி தீ பிடித்த லாரி

  • April 15, 2023
  • 0 Comments

கோவை கோவில்பாளையத்தில் இருந்து கவுண்ட்ம்பாளையத்திற்கு அட்டைப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்துள்ளது. லாரியை கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரி துடியலூர் அருகே உள்ள செங்காளிபாளையம் பகுதியில் வரும்போது எதிரே வந்த பேருந்துக்கு வழி விடுவதற்காக லாரியை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது சாலை ஓரம் இருந்த தனியார் கம்பெனியின் டிரான்ஸ்பார்மரில் இருந்த மின் கம்பியில் அட்டைப் பெட்டிகள் உரசியுள்ளது. அப்போது டிரான்ஸ்பார்மரில் பயங்கர சத்தம்  ஏற்பட்டு அட்டைப் பெட்டிகள் தீ பிடித்து […]

செய்தி தமிழ்நாடு

எப்.ஐ.ஆர் பதியாமல் இருக்க லஞ்சம்

  • April 15, 2023
  • 0 Comments

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த மலைப்பாளையத்தை சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது தாய் தனலட்சுமி என்பவருக்கும் இடையே கடந்த, 22ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்த போரின் பேரில் சுல்தான்பேட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் பஞ்சலிங்கத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஜெயபிரகாஷ் புகார் அளித்திருப்பதாகவும் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு காவல் நிலையம் வந்த பஞ்சலிங்கத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் […]

error: Content is protected !!