இந்தியா

இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூட நடவடிக்கை!

இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூதரகத்தின் செயல்பாடுகளை மேற்கொள்வதில் இராஜதந்திர ஆதரவின்மை மற்றும் பணியாளர்கள் மற்றும் வளங்களின் பற்றாக்குறை போன்ற சிக்கல்களால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கான தூதரக சேவைகளை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான் அரசாங்கத்தை இந்தியா அங்கீகரிக்கவில்லை, மேலும் காபூலில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டனர்.

புதுடில்லியில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், இந்திய அரசின் ஒப்புதலுடன் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே