ஐரோப்பா செய்தி

கிறிஸ்துமஸ் காலத்தில் துஷ்பிரயோகம் தொடர்பான அழைப்புகள் அதிகரிப்பு

  • January 12, 2026
  • 0 Comments

கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில், வடக்கு அயர்லாந்து பொலிஸாருக்கு கிடைத்த துஷ்பிரயோகம் தொடர்பான அழைப்புகள் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வரை, பொலிஸாருக்கு மொத்தம் 1,407 அழைப்புகள் வந்துள்ளன. கடந்த ஆண்டின் அதே காலகட்டத்தை விட 117 அழைப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான நான்காவது அதிகபட்ச எண்ணிக்கை […]

செய்தி விளையாட்டு

நியூசிலாந்து தொடர் – உபாதை காரணமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகல்

  • January 12, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், நேற்று ஆரம்பமான ஒருநாள் தொடரின் முதல் போட்டி வதோதராவில்(Vadodara) நடைபெற்றது. இதில், சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது காயமடைந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்(Washington Sundar) நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

செய்தி

போருக்கு தயாராக இருக்கிறோம் – ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதில்!

  • January 12, 2026
  • 0 Comments

அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறை தொடர்பாக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, ஈரான் ‘போருக்குத் தயாராக’ இருப்பதாக அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல்கள் மற்றும் நேரடித் தாக்குதல்கள் உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைக்கு ‘மிகவும் வலுவான விருப்பங்களை’ பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்கள் வெளிநாட்டு தலையீட்டைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளார். ஈரானில் […]

இலங்கை செய்தி

அநுர அரசுமீது தமிழர்களுக்கு நம்பிக்கை: ஆஸ்திரேலிய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் எடுத்துரைப்பு!

  • January 12, 2026
  • 0 Comments

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) உடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று மேற்படி சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போது மாகாணத்தின் பொருளாதாரம் குறித்தும் ஆளுநர் தெளிவுபடுத்தினார். ” வடக்கு மாகாணத்தில் விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ஆகிய […]

உலகம்

அமெரிக்காவில் பாரிய ரயில் விபத்துகளுக்கு பின்னால் இருக்கும் நிர்வாகத் தோல்வி!

  • January 12, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 3,000 க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் மனித தவறுகள் மற்றும் தண்டாவள குறைபாடுகள் காரணமாக இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துகளில் 23 இறப்புகள் மற்றும் கிட்டத்தட்ட 1,200 பேர் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேரிலாந்து (Maryland) பல்கலைக்கழகத்தில் உள்ள ஹோவர்ட் (Howard) புலனாய்வு பத்திரிகை மையத்தின் பகுப்பாய்வில், இந்த தோல்விகளுக்குப் பின்னால் ஒரு சக்திவாய்ந்த துறை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக கூட்டாட்சி ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் பெரும்பாலும்  பாதுகாப்பு பரிந்துரைகளை  புறக்கணித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு சீர்திருத்தங்களை […]

அரசியல் இலங்கை செய்தி

சஜித்துக்கு ரணில் கொடுத்த “பிறந்தநாள் பரிசு” – தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்!

  • January 12, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு Sajith Premadasa , ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தொலைபேசி ஊடாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், சஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுக்கு தமது பிரதிநிதிகளையும் அவர் அனுப்பியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் 59 ஆவது பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு கங்காராம விகாரையில் விசேட வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் எரிபொருள் விநியோகம் நிறுத்தம்!

  • January 12, 2026
  • 0 Comments

டீசல் கார்கள் இல்லாத இங்கிலாந்தின் முதல் நகரமாக லண்டன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நியூ ஆட்டோமோட்டிவ் ( New AutoMotive) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030 முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையைத் தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த கணிப்பு வந்துள்ளது. இதற்கமைய தலைநகரில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் எரிபொருள் விற்பனையை நிறுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் 8,400 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல […]

இந்தியா செய்தி

விஜய்யிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

  • January 12, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில கேள்விகளை கேட்பதற்காக நாளையும் அவரை விசாரணைக்கு ஆஜராக சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப்பட்டது. அதில் 12 ஆம் திகதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. […]

இலங்கை செய்தி

அநுர அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கியது சீனா: வெளிவிவகார அமைச்சர் கூறியது என்ன?

  • January 12, 2026
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்குரிய ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு இன்று (12) பயணம் மேற்கொண்ட அவர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் Vijitha Herath இரு தரப்பு பேச்சில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டே சந்திப்பு நடைபெற்றது. வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் கூட்டாண்மையை […]

இலங்கை செய்தி

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் பலி: மலையகத்தில் தொடரும் சோகம்!

  • January 12, 2026
  • 0 Comments

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். நுவரெலியா மாவட்டம் Nuwara Eliya , நானுஓயா Nanu Oya கிரிமிட்டி பகுதியிலேயே இன்று (12) இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக் கூட்டை கழுகு தாக்கிய நிலையில், கலைந்து வந்த குளவிகள் குறித்த பெண்ணை தாக்கியுள்ளன. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 78 வயதான நடராஜா லெட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

error: Content is protected !!