வலிந்து காணாமல் ஆகப்பட்ட உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இடம்பெற்றது.
இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே உரிய தீர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.