ஆஸ்திரேலியாவில் போராட்டம் – 27 பேர் கைது!
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் ஆஸ்திரேலிய வருகைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஏறக்குறைய 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று சிட்னியில் முன்னெடுக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் பொது சபை கட்டுப்பாடு பிரகடனம் (PARD) மற்றும் முக்கிய நிகழ்வுகள் சட்டத்தின்படி கூட்டத்தினர் கலைந்து செல்ல வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியபோதும் போராட்டக்காரர்கள் நாங்கள் அணிவகுத்து செல்வோம் என கோஷமிட்டு முன்னேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது போராட்டக்கார்களுக்கும், பொலிஸாருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸார் மீது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் பின்னரே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி
இஸ்ரேலிய ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு – அவுஸ்திரேலியா முழுவதும் வெடித்த போராட்டம்





